Sunday 28th of April 2024 07:02:08 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா
சென்னையில் கொரோனாவுக்கு 81 பேர் பாதிப்பு!

சென்னையில் கொரோனாவுக்கு 81 பேர் பாதிப்பு!


தமிழ்நாடு சென்னையில் இதுவரை கொரோனவுக்கு 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சென்னை மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 81 பேர் பாதித்திருப்பதாகவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அடுத்தபடியாக, திண்டுக்கல் 43, திருநெல்வேலி 36, ஈரோடு 32, கோவை 29, தேனி 21, நாமக்கல் 21, கரூர் 20, செங்கல்பட்டு 18, மதுரை 15, விழுப்புரம் 13, திருவாரூர் 12, விருதுநகர் 11, திருப்பத்தூர் 10, தூத்துக்குடி 9, சேலத்தில் 8 பேரும், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, சிவகங்கை, நாகபட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா 5, காஞ்சிபுரத்தில் 4 பேரும், திருவண்ணாமலை, இராமநாதபுரத்தில் தலா 2, திருவள்ளுர், தஞ்சாவூர், வேலூர், திருப்பூரில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE